100 கோடி வசூல் வந்தாலும் சரி அதை மட்டும் செய்ய மாட்டேன் என கார்த்தி ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து வருகிறார்.
Karthi Decision on His Salary : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் என்பது அனைவரும் அறிந்ததே. சூர்யாவின் தம்பியும் சிவக்குமாரின் இளைய மகனுமான கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பார்வையையும் தன் மீது திருப்பினார். அதன் பின்னர் தொடர்ந்து நடந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான பையா, அலெக்ஸ் பாண்டியன், தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை, கடைக்குட்டி சிங்கம், கைதி, மெட்ராஸ் என பல படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன.
இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது.
இருப்பினும் நடிகர் கார்த்தி தன்னுடைய சம்பளத்தை உயர்த்த மாட்டேன். எனக்கு தற்போது வரும் 12 கோடி ரூபாய் சம்பளமே போதும் என உறுதியாக தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருசத்துக்கு வருசம் சம்பளத்தை உயர்த்திக் உயர்த்திக் கொள்ளும் டாப் ஹீரோக்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனுஷனா என கோலிவுட் வட்டாரம் வியந்து வருகிறது.