jyothika : 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா.
திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.
அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா – இயக்குனர் யார் தெரியுமா?
இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாபநாசம், 36 வயதினிலே புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்
மேலும் இப்படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களா நடிப்பதாகவும் ஒரு சம்பவத்தில் இருந்து குடும்பமாக இவர்கள் எப்படி ஒன்றிணைந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
இந்நிலையில் இப்படத்தில் இவர்களது தந்தையாக யார் நடிக்க போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் சத்யராஜ் தான் இப்படத்தில் கார்த்தி – ஜோதிகாவின் அப்பாவாக நடிக்கிறாராம்.
இவர் நிஜத்திலும் அவர்களுக்கு சொந்தக்காரர் என்பதால் இந்த கூட்டணி அசத்தலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.