எனக்கு ஷூட்டிங் முடிந்தது என ட்வீட் செய்த ஜெயம் ரவியை கலாய்த்து தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.

Karthi About Ponniyin Selvan Character : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், நடிகர் கார்த்தி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, திரிஷா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான #பொன்னியின்செல்வன் படபிடிப்பு குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளார்கள்.

#பொன்னியின்செல்வன் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ஜெயம் ரவி, “பொன்னியின்செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன். மணி ( மணிரத்தினம் ) சாரின் காமெடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்”.. என்று ரவி டிவிட் செய்துள்ளார்.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இதை படித்த கார்த்தி, “இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது 😁. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.- வந்தியத்தேவன்🐎🐎 ” என்றுகார்த்தி டிவிட் செய்து பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டர் வந்தியதேவன் என்பதை உறுதி செய்துள்ளார்.

இப்படி கார்த்தி டிவிட் செய்ததை ரசிகர்கள் ரசித்து கொண்டாடுகிறார்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.