காந்தாரா 2 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூபாய் 350 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஏ படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ டி டி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்கதையா அல்லது முன்னுரையா என்பது பற்றி உறுதியாகவில்லை என்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி வெளிநாடு சென்று இருப்பதால், அவர் திரும்பி வந்த பின்பு இது குறித்து அவரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டாம் பாகத்திற்கு அவருக்கு ஓகே என்றால் இன்னும் சில மாதங்களிலேயே இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.