Kanne Kalaimane : அடுத்த படத்தில் நீங்க இருக்கீங்க என போலி வாக்குறுதியை அளிக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில், முந்தைய படங்களின் படப்பிடிப்பில் சீனு சார் சொன்ன மாதிரி இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
அதுவும் தம்பி உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத்தின் ஒரு பகுதியாக என்னை ஒப்பந்தம் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவரது திரைப்படங்களின் ஒரு பெரிய ரசிகை.
சினிமாவில் மிகவும் எளிமையானவர் என பலரையும் குறிப்பிட்டு சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் மிகப்பெரிய ஒரு பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் எளிமையாக இருக்கும் உதயநிதி தம்பி தான் அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர்.
ராஜா ராணி சீரியலில் திடீர் மாற்றம், ரண கொடூரமான புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.!
படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை அவரால் செய்ய முடியுமா என எனக்கு சந்தேகம் இருந்தது.
ஆனால் அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். படத்தின் இறுதி காட்சியில் அவர் என்னிடம் ‘அப்பத்தா’ எனக் கூற வேண்டும், அந்த காட்சியில், இயல்பாக என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.
படத்தின் ஒரு காட்சியில் கிளிசரின் பயன்படுத்தாமலேயே தமன்னா அழுகிற காட்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர், நடிகைகளிடமிருந்து சிறந்ததை பெற சீனு சாரால் மட்டுமே முடியும்” என்றார் நடிகை வடிவுக்கரசி.
இந்த படம் உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 22-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.