மகன் பிறந்த அடுத்த கணமே மருத்துவர்கள் உயிருக்கு கெடுவைத்த சம்பவம் குறித்து பேசி உள்ளார் கனிகா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அஜித் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

தற்போது இவர் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது instagram பக்கத்தில் மகன் பிறந்த போது நடந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து பேசி உள்ளார்.

மகன் பிறந்ததும் அவனை என் கண்ணில் காட்டவில்லை‌. இதயத்தில் பிரச்சனை இருக்கிறது இரவு வரை தான் குழந்தை உயிரோடு இருக்கும் என சொன்னார்கள். பிறகு 7 மணி நேரம் ஆபரேஷனுக்கு பிறகு அவனை பிழைக்க வைத்தார்கள். இதனால் அவனை தற்போது வரை மிகவும் கவனத்துடன் பார்த்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

கனிகா சொன்ன இந்த தகவல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இவருக்குள் இப்படி ஒரு சோகமா என வருத்தப்பட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.