Kangana Renavat About Sushant Singh
Kangana Renavat About Sushant Singh

சுஷாந்த் சிங்கிற்கு பிரபல பத்திரிக்கைகள் டார்ச்சர் கொடுத்ததைப் பற்றி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Kangana Renavat About Sushant Singh : பாலிவுட் சினிமாவில் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமாகி விடுவிடுவென வளர்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

பாலிவுட் சினிமாவின் டாப் பிரபலங்களான சல்மான்கான், கரண் ஜோகர் மற்றும் சில வாரிசு நடிகர்களால் இவருக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இது குறித்து ஏற்கனவே பல அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து தற்போது மீண்டும் அவர் இது குறித்து பேசியுள்ளார். பல மீடியாக்கள் சுஷாந்த் சிங்கிற்கு டார்ச்சர் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பொத்தி பொத்தி வச்சதை போட்டுடைத்த முக்கிய பிரபலம் – ஜகமே தந்திரம் படத்தின் கதை இது தான்!

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாலிவுட் லைப் என்ற பத்திரிக்கை ச* வைத்துக் கொள்ளும் போது அவருடைய பாட்டை அவரே கேட்கும் அளவிற்கு அதீத தன்மைய சிந்தனை கொண்டவர் என குறிப்பிட்டிருந்தது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி மும்பை மிரர் என்ற பத்திரிக்கை பார்ப்பதற்கு லாரி டிரைவர் போலவே தோற்றம் அளிப்பார் என்று கூறியிருந்தது.

அதேபோல் பிப்ரவரி 22, 2009 ஆம் ஆண்டு இதே மும்பை மிரர் பத்திரிகை பார்ட்டி ஒன்றில் சுஷாந்த் இயக்குனர் மீது பாட்டிலை வீசியதாக பொய் கூறி இருந்தது.

அக்டோபர் 18, 2018 ஆம் ஆண்டு டி என் ஏ என்ற பத்திரிக்கை நிஷாந்த் தன்னுடன் நடித்த நடிகையை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் இதனால் அவர் மீண்டும் மீ டூ என்ற பெயரில் சிறைக்குச் செல்ல நேரிடலாம் என பொய் தகவலை வெளியிட்டது.

இவை அனைத்திற்கும் காரணம் சினிமாக்காரர்களின் மாபியா தான் என அவர் தெரிவித்துள்ளார்.