kangana ranaut :
தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள்.
இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
நயன்தாராவை தான் நம்பி இருக்கேன் – நிவின் பாலியின் நிலமை இப்படி ஆகிடுச்சே!
இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இதனால் தமிழ் ரசிகர்கள் விஜய் மீது கடுப்பில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவாக நடிக்க தமிழில் வேறு நடிகைகளே இல்லையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்த விஜய், “ ஜெயலலிதா ஒரு தேசிய தலைவி. அதனால் அவர் கதாபாத்திரத்தில் தேசம் முழுக்க தெரிந்த ஒரு நடிகை நடிக்கவேண்டும் என்று விரும்பினேன்.
மேலும் இப்படம் இந்தியிலும் வெளியாவதால்தான் இந்த முடிவு” என விளக்கம் கொடுத்துள்ளார்.
கங்கனா ரனாவத் நடிப்பில் அண்மையில் மணிகர்னிகா படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.