காஞ்சனா படத்தில் நடித்த திருநங்கை அளித்த பேட்டியில் அதிர்ச்சிகர தகவல்களை கூறியுள்ளார்.
Kanchana Transgender Life : தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் காஞ்சனா. இந்த படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்தார். அவரின் வளர்ப்பு மகளாக ப்ரியா என்ற திருநங்கை நடித்திருந்தார்.
தற்போது இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அந்த பேட்டியில் காஞ்சனா படத்திற்கு பிறகு நடந்த விசயங்களை பற்றி பேசியுள்ளார்.
இந்த படத்திற்கு பிறகு நிறைய இயக்குனர் தயாரிப்பாளர்கள் தனக்கு முகநூலில் வாய்ப்பு இருப்பதாக பேசுவார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் தனக்கு மெஸேஜ் செய்தார்.
பின்னர் என் மொபைல் நம்பரை கேட்டார், நானும் கொடுத்தேன். ஒரு வாரம் படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி பேசினார். அதன் பிறகு அவருடைய பேச்சு மாற தொடங்கியது. நீங்க எப்படி இப்படி மாறினீங்க? என அந்தரங்கங்களை பற்றி கேட்டார்.
நான் இதெல்லாம் படத்தில் இருக்கா என கேட்டதற்கு இல்லை உங்களை பற்றி புரிந்து கொள்ள கேட்கிறேன் என கேட்டார். நான் போனை கட் செய்து விட்டேன், அதன் பிறகு அடஜஸ்ட்மென்ட் செய்தால் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
அப்படியான வாய்ப்பே வேண்டாம், அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது, அடஜஸ்ட்மென்ட் செய்து தான் நடிக்க வேண்டும் என நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.
இன்னும் நிறைய இயக்குனர், தயாரிப்பாளர்கள் இப்படி தன்னை அணுகி இருப்பதாக கூறியுள்ளனர்.