Kanchana 3 Actress : காஞ்சனா 3 பட நடிகையை படுக்கைக்கு அழைத்துள்ளார் பிரபல மாடலிங் நடிகர் ஒருவர்.
திரையுலகில் உள்ள நடிகைகளை வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீப காலமாக பல நடிகைகள் இது குறித்து வெளிப்படையாக கூறி பலரின் முகத்திரைகளை கிழித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ள நடிகையான ஜானே கட்டாரியாவுக்கு பிரபல லுங்கி விளம்பரத்தில் நடித்துள்ள மாடலிங் நடிகரான ரூபேஷ் குமார் படுக்கைக்கு அழைத்துள்ளார்.
ஜானே கட்டாரியா ரஷ்யாவை சேர்ந்த நடிகை, 30 வயதாகும் இவரை ரூபேஷ் சமூக வளையத்தளம் மூலமாக தொடர்பு கொண்டு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அதன் பின்னர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு என கூற அதற்கு முடியாது என மறுத்துள்ளார் நடிகை.
இதனால் போட்டோஷூட் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து நடிகைக்கு அனுப்பி இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் ரூபேஷ்.
இருப்பினும் அதற்கெல்லாம் அஞ்சாமல் நடிகை ஜானே சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க அவர்கள் உடனடியாக ரூபேஷ் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.