பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்திற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
Kamalhaasan replied to jayakumar comment – சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ‘கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார். திடீரென அரசியல் பேசுவார். அதன்பின் காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார். பிக்பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு தேவையில்லாதது. அது கலாச்சார சீரழிவு.அந்த வீடே ஒரு அலிபாபா குகை போல் உள்ளது. வீட்டில் இருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடி வருகின்றனர்’ என பேசியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் தடை கோர முடியுமா என்ற கேள்விக்கு ‘ திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என பதிலளித்தார்.
தர்ஷன் விசயத்தில் ஏமாற்று வேலை செய்த டிவி சேனல்..? ரசிகரின் டீவீட்டால் சர்ச்சை.!
மேலும், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் மூலம் ஆள்மாறாட்டத்தை துவங்கி வைத்தவர் கமல்ஹாசன்தான் எனவும் அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த கமல்ஹாசன் ‘ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத்தான் பார்க்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி மோசம் எனில் இந்த ஆட்சியையும் அப்படித்தான்’ என பதிலடி கொடுத்தார்.