கோரோனோ சிகிச்சைக்காக என் வீட்டை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற தயாராக இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
KamalHaasan Announcement on Corono : கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவையும் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அரசு அனுமதித்தால் மக்கள் நீதி மய்யம் சார்பாக என்னுடைய வீட்டை தற்காலிக மருத்துவமனையாக மாற்றவும் மக்கள் நீதி மய்யத்தில் உள்ள மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும் திரையுலகை சார்ந்த பெப்சி தொழிலாளர்களின் நலனுக்காக ரூ 10 லட்சமும் நிதி அளித்துள்ளார்.
இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
உங்கள் நான்— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2020