பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன் என அவருடைய பேச்சு குறித்து கமல்ஹாசன் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Kamal Haasan Tweet About PM Speech : இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி காலை 9 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்றி அல்லது டார்ச்லைட் அல்லது மெழுகுவர்த்தி ஆகியவற்றை ஏற்றி வையுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை வெளிவராத துள்ளுவதோ இளமை புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின் – இதோ பாருங்க.!
இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 3, 2020