இயக்குனர் விட்ட சவால் ஒரே வாரத்தில் தேவர் மகன் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
Kamal Haasan About Thevar Magan : தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர்.
இவர் நேற்று தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் ஏ ஆர் ரஹ்மானுடன் லைவ் ஷேட்டில் சமூக வலைதள பக்கங்களில் உரையாடினார்.
அப்போது தேவர் மகன் படம் பற்றி பேசியுள்ளார். கமலும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த இந்த படத்தை கமலின் நண்பரும் இயக்குனருமான பரதன் இயக்கியிருந்தார்.
ஆனால் இப்படத்தின் திரைக்கதையை உலகநாயகன் கமல்ஹாசன் தான் எழுதியிருந்தார். திரைக்கதை எழுதி முடிக்க ஒரு மாதம் தேவையா அல்லது அதற்கு மேல் ஆகுமா என இயக்குனர் கேட்டுள்ளார்.
இதனை சவாலாக எடுத்துக் கொண்ட கமல்ஹாசன் எண்ணி ஏழே நாளில் மொத்த திரைக்கதையும் எழுதி அவரது கையில் கொடுத்துள்ளார்.
தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக தலைவன் இருக்கிறான் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்தப்படத்தில் கமலும் ரகுமானும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதற வைக்கும் பாட்டில் கேப் சேலஞ்சு, அர்ஜுன், அக்ஷய் வெளியிட்ட வீடியோவை பாருங்க.!
தேவர் மகன் படம் உருவான விதம் பற்றி முதல் முறையாக கமல்ஹாசன் கூடிய இந்த சூப்பரான தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.
இதனால் ரசிகர்கள் கமல்ஹாசனின் திறமையை பாராட்டி வருகின்றனர்.