திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.
Kadambur Raju About Theatre Open : தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தொழில்களும் அப்படியே முடங்கிப் போயுள்ளன.
பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கல்வி நிலையங்கள், பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், திருமணக் கூடங்கள், மால்கள், தியேட்டர்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் மாநில அரசு பொது இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆகஸ்ட் 1முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரைப்படங்களை திரையிட தியேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ள தகவல்கள் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள் போன்றவற்றை திறக்க அனுமதியளித்து தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.