OTT வழியாக படத்தை வெளியிடுவதால் நஷ்டம் ஏற்படுவதாக தமிழக அமைச்சர் கூறியுள்ளார்.
Kadambur Raju About Ponmagal Vanthal : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக OTT வழியாக வெளியாக தொடங்கியுள்ளது.
இதற்கு அடித்தளமாக முதல் படமாக சூர்யாவின்தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மகள் வந்தாள் என்ற திரைப்படம் நேற்று வெளியானது.
இதுகுறித்து தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். படம் நேரடியாக OTT வழியாக வெளியாவதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
ஆனால் இதனை அரசு நேரடியாக தடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக அமேசான் வீடியோவில் வெளியிட்டதால் கடம்பூர் ராஜு சூர்யாவை தாக்கிப் பேசியதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.