விஜய் பயந்து விட்டார் அவரிடம் பணம் நிறைய இருப்பதால் ஆண்மை போய் விட்டது என பிரபல தயாரிப்பாளர் விளாசியுள்ளார்.
K Rajan Blast Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் தளபதி விஜய் மத்திய அரசை சீண்டி பல இடங்களில் டயலாக் பேசி இருந்தார்.
அதன்பிறகு தளபதி விஜய் வீட்டில் ஐ டி ரைட் எல்லாம் நடந்தது. இந்த நிலையில் தற்போது 2 ஆயிரம் என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் தளபதி விஜய்யை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
அதாவது மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றி பேசியதால் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மத்திய அரசின் பற்றி பேசுவதே இல்லை. விஜய் பயந்துவிட்டார். அவரிடம் நிறைய பணம் இருக்கிறது. நிறைய பணம் இருப்பவர்களிடம் ஆண்மை போய் விடுகிறது. கொடுமைகளை எதிர்க்கும் தன்மையும் போய்விடுகிறது.
மேடையில் Sunitha-வை கலாய்த்த Ashwin! | Enna Vazhka Da Album Launch
யார் தவறு செய்தாலும் அவர்களை எதிர்க்கும் தன்மை ஏழைகளுக்கு மட்டுமே உள்ளது என கே ராஜன் கூறியுள்ளார். இவர் இவ்வாறு பேசியது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.