சூர்யா நல்ல பையன் தான் ஆனால் கொஞ்சம் இதையும் யோசிக்க வேண்டும் என ஓப்பனாக அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ராஜன்.

K Rajan About Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் இறுதியாக வெளியானது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக இந்தப் படம் நேரடியாக OTT-யில் வெளியானது.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

இதனையடுத்து தற்போது திரையரங்குகள் திறந்து உள்ள நிலையில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் தான் வெளியாகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சூர்யாவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் சூர்யா குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதாவது சூர்யா மற்றும் கார்த்தி என இருவருமே நல்ல பையன்கள் தான். சிவக்குமாரிடம் இருந்த நேர்மை காலம் தவறாமை நல்ல குணம் என அனைத்தும் இவர்களிடமும் உள்ளது. சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகும்போது திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அவர்தான் முதல் ஆளாக நேரடியாக OTT-யில் வெளியிடும் முயற்சியை மேற்கொண்டார். அப்போதைக்கு அது நல்ல விஷயம் தான்.

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்! 

ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன. இது குறித்து அவர் ஆலோசனை செய்ய வேண்டும். திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலில் படம் திரையரங்குகளில் வெளியான பின்னரே OTT தலங்களில் வெளியாக வேண்டும் என்பதுதான் அது. சூர்யா இதையும் கொஞ்சம் யோசனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.