Jyothika Talks About Kaakha Kaakha 2 :
காக்க காக்க இரண்டாம் பாகம் எடுத்தால் நடிப்பீர்களா என ஜோதிகாவிடம் கேட்டதற்கு அதான் முதல் பாகத்தில் நான் இறந்துவிடுவேனே.. வந்தால் இரண்டாம் பாகத்தில் பேயாகத்தான் வரவேண்டும் என்று ஜாலியாக கூறினார்.
சூர்யாவின் திரை பயணத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்த ஒரு நபர் அவருடைய காதல் மனைவி ஜோதிகா.
முதல் வெற்றிக்காக சூர்யா போராடிக் கொண்டிருந்த காலத்தில் ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார்.
எனினும் அன்றுமுதல் சூர்யாவுக்கு உறுதுணையாக இருந்த ஜோதிகா, இன்று அவர் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறார்.
மதம் கடந்து மொழி கடந்து பல ஆண்டுகள் காத்திருந்து கடந்த 2006ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
ரஜினியோட சேர்ந்து இத செஞ்சாலே போதும் – வெளிப்படையாக சொன்ன தனுஷ்!
இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா – ஜோதிகாவின் திருமணத்திற்கு இருந்த எதிர்பார்ப்புகளும் ஆரவாரங்களும் தற்போது வரை எந்த தமிழ் நடிகர்களுக்கும் கிடைத்தில்லை.
தற்போது ஜோதிகா மீண்டும் நடிக்கவந்திருப்பதால் சூர்யாவும் அவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
அதுவும் காக்க காக்க இரண்டாம் பாகம் எடுத்தால் நடிப்பீர்களா என ஜோதிகாவிடம் கேட்டதற்கு அதான் முதல் பாகத்தில் நான் இறந்துவிடுவேனே.. வந்தால் இரண்டாம் பாகத்தில் பேயாகத்தான் வரவேண்டும் என்று ஜாலியாக கூறினார்.