மீண்டும் ஒரே படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பது பற்றி ஜோதிகா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பிரபல நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா தற்போது மீண்டும் தொடங்கி விட்டார். இதனால் சூர்யா ஜோதிகா இணைந்து நடிப்பார்களா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விருது விழா ஒன்றில் நாங்க இருவரும் இணைந்து நடிக்க தயாராக தான் உள்ளோம். ஆனால் ஒரு நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.