பூஜை அறையில் போட்டோ வைத்து கடவுளாக ஜூலியை வழிபட்டு வருகிறார் வெறித்தனமான ரசிகர் ஒருவர்.
Julie Photo in Poooja Room : மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி ஆக தமிழக மக்களிடையே பிரபலம் ஆனவர் ஜூலி என்கிற ஜூலியானா.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகு இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய புத்தம் புதிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
ஆனால் இந்த நிகழ்ச்சி ஜூலி பெற்றிருந்த பெயரை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டது. போராட்டத்தின் மூலம் தான் சேர்த்து வைத்த அனைத்து நல்ல பெயரையும் இழக்கச் செய்தது. மக்களிடையே வெறுப்பை பெற்றுத் தந்தது.
இதனையடுத்து ஜூலி சமூக வலைதள பக்கங்களில் எதைப்பத்தி விட்டாலும் அவரை விமர்சிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் ஜூலியின் புகைப்படத்தை பூஜை அறையில் கடவுளாக வைத்து வழிபட்டு வருகிறார் ரசிகர் ஒருவர்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கு ஷாக் கொடுத்து வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்னடா ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரான ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.