அட்லீ முன்னணி இயக்குனர் தான் ஆனால் நல்ல இயக்குனர் இல்லை, அந்த தகுதியை அவர் அடையவில்லை என பேசியுள்ளார் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர்.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை தளபதி விஜயை வைத்து இயக்கினார்.
ஆனால் இவர் இயக்கிய அத்தனை படங்களும் காப்பி என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
தற்போது பிரபல பத்திரிகையாளரான பனிமலர் என்பவர் காப்பி விவகாரம் வைத்து அட்லீயை விளாசியுள்ளார்.
இது குறித்து அவரது பதிவில் யார் வேண்டுமானால் ஒரு கதையின் தழுவலை படமாக்கலாம். ஏன் பச்சையாக கூட காப்பி அடிக்கலாம். ஆனால் அமைதியாக இருந்திருக்கலாம், ஏன் அண்ணனுக்கு நான் தாண்டா பண்ணுவேன் என உதார் எல்லாம் விட்டது தான் பிரச்சனை.
படக்குழுவை தேர்வு செய்வது, எங்கே எமோஷன் காட்சிகளை வைப்பது என்றெல்லாம் நன்கு அறிந்து வைத்துள்ள அட்லீ கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அப்படி செய்தால் நல்ல இயக்குனர்கள் பட்டியலில் அட்லீக்கும் இடம் கிடைக்கும்.
இல்லையேல் முன்னணி நடிகர்களை இயக்கும் முன்னணி இயக்குனராக மட்டுமே இருக்க முடியும், நல்ல இயக்குனராக முடியாது என கூறியுள்ளார்.
#Bigil #directoratlee pic.twitter.com/KmTNE1lz3w
— Panimalar Panneerselvam (@PanimalarPs) November 3, 2019