பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜோ மைக்கேல்.
Joe Micheal File Case on Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இருப்பவர் பாலாஜி முருகதாஸ்.
இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான சனம் ஷெட்டியுடன் பேசிய போது ஜோ மைக்கேல் பிரபல மாடலிங் நிறுவனம் ஒன்றை டுபாக்கூர் கம்பெனி என கூறினார், இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிறுவனத்திற்கு சம்மந்தமான திரு.ஜோ மைக்கில் பிரவின் என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு அவருடைய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார். பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.