நடிகர் ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பேசி உள்ளது வைரலாகி வருகிறது.

கல்கி புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “கல்கியின் ஆத்மா இன்று சாந்தி அடையும், மணிரத்தினத்தின் கனவு நனவாகியுள்ளது, எங்களது உழைப்பை உங்கள் முன் வைத்துள்ளோம், இந்த படம் உங்களை ஏமாற்றாது” என்று தெரிவித்துள்ளார்.