ஜெயம் ரவி சினிமா சம்பந்தமான கேள்விகளை விக்ரமிடம் கேட்டபோது அவர் கூறிய பதிலால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி. நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

அதில் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்துள்ளார்களாம். அப்போது இருவரும் ஒன்றாக ஷூட்டிங் செல்ல ஜெயம் ரவி விக்ரமிடம் சினிமா சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வாராம். அதேபோல் ஒரு சமயம் ஜெயம் ரவி விக்ரமிடம் ஒரு வருடத்திற்கு ஒரு படம் இல்லை நாலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் நீங்கள் எப்படி மூணு நாலு வருஷத்துக்கு ஒரு படம் பண்றீங்க? என்ற கேள்வியை கேட்டுள்ளார், மேலும் அந்த நாலு வருஷமும் என்ன பண்ணுவீங்க என்றும் கேட்டிருக்கிறார்.

அதற்கு நடிகர் விக்ரம் அளித்த பதிலைக் கேட்டு ஜெயம் ரவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது விக்ரம் கூறியது மூச்சுப் பயிற்சி பண்ணு எல்லாம் சரியாகிவிடும் மேலும் ரிசல்ட் நல்லதாகவே இருக்கும் என்று சிம்பிளாக பதில் அளித்து அதிர்ச்சியடைய செய்துள்ளார். ஆனால் நிஜமாகவே விக்ரம் அதை தான் பண்ணுவாராம் அப்படி இருந்ததால்தான் அவருக்கு ஐ , அன்னியன் போன்ற நல்ல கதைகளை சினிமாவிற்கு கிடைத்தது என்ற தகவலை ஜெயம் ரவி அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் பகிர்ந்துள்ளார்.