கோமாளி பட கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இயக்குனர் பிரதீப் ஆட்டோ ஓட்டுனராக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதீப் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் இசையமைப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.

இப்படியான நிலையில் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளிவந்தது. மேலும் அந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதே சமயம் ஏஜிஎஸ் தரப்பில் விசாரிக்கையில் பிரதீப் இயக்குவது உறுதி ஆனால் ஹீரோ உறுதி செய்யப்படவில்லை என சொல்கின்றனர். மேலும் மீண்டும் பிரதீப் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.