Jayam Ravi :
3 படத்திற்கு சம்பளமாக போயஸ் கார்டனில் உள்ள தயாரிப்பாளரின் வீடு ஒன்றை தன் பெயருக்கு மாற்றி கொடுக்க சொன்னதாக வெளியான தகவலுக்கு ஜெயம் ரவி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. படத்திற்கு படம் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்பை திறம்பட வெளிப்படுத்தி வருபவர்.
இவர் சமீபத்தில் ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக மூன்று படங்களை கொடுத்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் ஒன்று வெளியானது.
இதனையடுத்து பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்று மூன்று படங்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஜெயம் ரவி போயஸ் கார்டனில் உள்ள தயாரிப்பாளரின் வீட்டை தன்னுடைய பெயருக்கு மாற்றி வாங்கி கொண்டதாக தகவல் வெளியிட்டது.
இந்த தகவல் பிரபல பத்திரிக்கை ஒன்றிலும் இடம் பெற தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் ஜெயம் ரவி.
இது முற்றிலும் தவறான செய்தி என மறுத்து ட்வீட் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Grateful for my fans who know me the best ????????❤️ I request publications to check facts before speculating on baseless rumours. https://t.co/RWvevVhRZi
— Jayam Ravi (@actor_jayamravi) February 27, 2019