முதல்வரின் நிவாரண நிதிக்கு ஜெயம் ரவி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் நிதி அளித்துள்ளனர்.
Jayam Ravi and Vetrimaran Donates to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பற்றி உலக நாடுகள் அனைத்தையும் எச்சரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் தாராளமாக நிதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
இதனையடுத்து நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் ரூபாய் 10 லட்சம் நிதியாக அளித்துள்ளனர்.