Jayalalithaa Statue

Jayalalithaa Statue : அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக, கடந்த 2016- ஆம் ஆண்டில் காலமானார்.

இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் , ஜெயலலிதாவின் வெண்கல சிலை கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் சிலையை செதுக்கிய சிற்பிக்கு மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது. ஆனால் ‘சிலையின் வடிவத்தில் சிறிதும் ஜெயலலிதா தோற்றம் தோன்றவில்லை’ என்று சமூகவலைதளங்களில் செய்தி வெளியானது.

இந்த விமர்சனங்களுக்கு பிறகு, ‘தற்போது வைக்கப்பட்டுள்ள சிலைக்கு பதில் வேறு ஒரு புதிய சிலை வைக்கப்படும் ‘ என்று முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை திறந்து வைக்கபட உள்ளது.

இந்த சிலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

ஜெயலலிதாவின் புதிய சிலையை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவர் வடிவமைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.