Jayalalithaa : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்தில், அன்றைய கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டது முதல், அவர் இறந்தது வரை அனைத்து தகவலும், அன்று நமக்கு கவர்னர் அலுவலகத்தில் இருந்துதான் தகவல் வெளியானது.
மேலும், அப்போது ஜெயலலிதா உடல்நலம் குறித்து அவ்வப்போது கவர்னர் மருத்துவமனை சென்று தெரிந்து கொண்டார்.
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் 06.10.2016 அன்று ஆளுநருக்கு எழுதிய கடிதம் நகல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ” 01.10.2016 அன்று ஜெயலலிதா பார்த்த போது உணர்வற்று இருந்தார். மேலும், ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அவ்வபோது அறிக்கை விடுமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளேன்” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி இருக்கிறார்.
தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது