Jayakumar Comment Sarkar

Minister Jayakumar Comment Sarkar : இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

அதன் பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார். அதில், ” தமிழ் வளர்ச்சிக்கு வீரமாமுனிவர் பல தொண்டுகளை செய்துள்ளார். தமிழ் உள்ளவரை வீரமாமுனிவர் பெயரும் இருக்கும்” என கூறினார்.

பின்னர், ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை ‘சர்கார் ‘ திரைபடத்தில் எதிர்மறையாக காட்சிபடுத்தி இருப்பதை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ” ஜெயலலிதா இல்லாமல் பலருக்கும் குளிர் விட்டு போய்விட்டது.

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியதை போல் சர்கார் திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அழுது புரண்டாலும், தலைகீழாக நின்றாலும் , நடிகர் விஜய் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது, எப்போதும் ஒரே ஒரு எம். ஜி.ஆர் தான்.

இதுபோன்ற படங்களை ஜெயலலிதா இருந்த போது எடுத்திருக்க இவர்களால் முடியுமா? மேலும், பண மதிப்பிழப்பு குறித்து முடிவு செய்ய வேண்டிய நீதிபதி மக்கள் தான் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தான் விடை கிடைக்கும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.