ஜப்பான் திரைப்படத்தின் திரைக்கதை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது ஜப்பான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அனு இமானுவேல் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் introduction வீடியோவை படக்குழு வெளியிட்டு படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் திரைக்கதை குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஜப்பான் திரைப்படத்தின் திரைக்கதை பெரும் நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியான ‘திருவாரூர் முருகனின்’ வாழ்க்கை சம்பவங்களின் கற்பனையான தழுவல் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் இன்னும் 25 நாள் படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.