நடிகை ஜனனி ஐயர் தனது பெயரில் உள்ள ஐயர் என்ற வார்த்தையை தான் நீக்கி விட்டதாகவும் இனிமேல் என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்று ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனரான பாலா அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த அறிமுகமானவர் ஜனனி ஐயர். இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ள இவர் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையடுத்து தற்போது அறிமுக இயக்குனரான சந்தீப் ஷாம் அவர்களின் இயக்கத்தில் வெளிவர இருக்கும்  ‘வேழம்’ திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜனனி ஐயர். படம் ஜூன் 24 ஆம் தேதியில் வெளிவர இருக்கும் நிலையில் படக்குழு தற்போது பேட்டியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அதில் பேசிய ஜனனி ஐயர் தனது பெயரிலுள்ள ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாகவும், தன்னை வெறும் ஜனனி என்று அழைக்குமாறு அந்தப் பேட்டியில் கேட்டுக்கொண்டார்.  இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.