Janani Ashok Kumar Exit From Sembaruthi Serial

செம்பருத்தி சீரியலில் இனி என்னால் நடிக்க முடியாது என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Janani Ashok Kumar Exit From Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. கார்த்திக் ராஜ் மற்றும் சபானா ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. டிஆர்பி யில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ஜனனி. இவர் தனக்கென ஒரு தனி யூட்யூப் பக்கத்தைத் தொடங்கி அதில் மேக்கப் குறித்த விஷயங்களை பேசி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவின் நடிப்பில் திடீரென ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

லைவ் வீடியோவில் பேசிக்கொண்டிருந்த போது தனக்கு ஒரு கால் வந்ததாகவும் இனிய செம்பருத்தி சீரியலில் நடிக்க முடியாது எனவும் அந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்வது மிகவும் மன வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம் என்பதைக் கூறாமல் ஜனனி செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து கமெண்ட்களில் காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.