சிறந்த நீர் மேலாண்மை பணிகளில் முதலிடம் பிடித்ததற்காக தமிழகத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.
அத்தனைத் துறைகளிலும் தமிழகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயத்தை பாதுகாக்க மகசூலை அதிகரிக்கும் குடிமராமத்து போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீர்நிலைகளைப் பாதுகாக்க ஏரி குளங்கள் உள்ளிட்டவர்கள் தொடங்கி தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சிறந்த நீர் மேலாண்மை பணிகளுக்கான விருதை தமிழ்நாடு அரசு பெறுகிறது.
2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளுக்கான வெற்றியாளர்களை ஜல் சக்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
ஆறுகள் புத்துயிர் பெறுவதில் வேலூர் மற்றும் கரூர் மாவட்டம் முதல் இரண்டு இடங்களையும், நாடு முழுவதும் நீர் பாதுகாப்பில் பெரம்பலூர் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
இது முழுக்க முழுக்க தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது என பலரும் பாராட்டி வருகின்றனர்.