பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன்.
JaiShankar Son in Baakiyalakshmi Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சதீஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க சுசித்ரா என்பவர் நாயகியாக நடித்து வருகிறார். குடும்பத்தை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கும் அம்மாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சுசித்ரா.
ரூ.1.80 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற பெற்றோர் : வறுமை காரணமாகுமா?
இவர் தன்னுடைய குடும்பத்தினர் யாரும் தனக்கு ஆதரவாக இல்லாததால் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு தற்போது மசாலா பொடி அரைத்து விற்பனை செய்வது மற்றும் சமையல் ஆடர்களை எடுத்து சமைத்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார். இவருக்கு தற்போது மிகப்பெரிய ஆடர் ஒன்று கிடைத்துள்ளது. இந்த ஆர்டரை இது பெரிய தொழிலதிபராக இருக்கும் ராஜசேகர் என்பவர் கொடுத்துள்ளார்.
பொண்ணுங்க எங்க இருக்காங்களோ அங்க Rakshan இருப்பாரு! – கலாய்த்த நடிகை Pavithra Lakshmi
இந்த ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் யார் என்பதுதான் தற்போது தெரியவந்துள்ளது. இவர் பழம்பெரும் நடிகரான ஜெய்சங்கரின் மகன் ஆவார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பழம்பெரும் நடிகரான ஜெய்சங்கர் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.