ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க தயாராகி இருந்த சிவகார்த்திகேயனை மறுத்துள்ள ரஜினி வைரலாகும் புதிய தகவல்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிப்பதற்காக தயாராகி இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க உள்ளார். இது சம்பந்தமான அறிவிப்புகள் மற்றும் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் இப்படம் குறித்த தகவல்களை அவ்வப்போது பட குழு வெளியிடத் தொடங்கிய நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தனர்.

அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் , ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இது சம்பந்தமாக இயக்குனர் நெல்சன் ரஜினியிடம் சம்மதம் கேட்டபோது அவர் சிவகார்த்திகேயனை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். அதனால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த உறுதியான தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.