தளபதி விஜய் இன்றே விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IT Office Notice to Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் IT ரைடு நடந்தப்பட்டது. இந்த சோதனையில் விஜய் வீட்டில் எந்தவித ஆவணமும் ரொக்கமும் கைப்பற்றப்படவில்லை.
ஆனால் பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS-ல் ரூ 25 கோடி ரொக்கமும் பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ 75 கோடியும் கைப்பற்றப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளிக்க பைனான்சியர் அன்புசெழியன், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
விஜய் நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருப்பதால் அவரது வழக்கறிஞர் ஆஜராகி கால அவகாசம் கேட்பார் எனவும் கூறப்படுகிறது.