பிக் பாஸ் வீட்டுக்குள் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி ஒரு முறை கூட பேசாதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார் இசைவாணி.
Isaivani About Marriage Life : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் அதாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று கடைசியாக வீட்டை விட்டு வெளியேறியவர் இசைவாணி. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் ரசிகர்கள் கேட்டு வரும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் நான் அனைவரிடமும் சகஜமாக பேசினேன். அனைவருக்கும் பாட்டு பாட சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அது எல்லாம் விஜய்டிவி ஒளிபரப்பாமல் மறைத்து விட்டது என கூறியிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் உங்களை திருமணம் பற்றி பிக்பாஸ் வீட்டிற்குள் பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டுக்குள் நான் என் திருமண வாழ்க்கை பற்றி பேசவில்லை. அது எனக்கு தேவையில்லாதது. தேவை இல்லாத விஷயங்களையும் நினைவுகளையும் நான் மீண்டும் பேச விரும்பவில்லை. திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்த போது பலரும் உன்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்துவிட்டது என ஏளனமாக பேசினார்கள். அப்போது பாடி வெற்றி பெற்ற பாடல்தான் அடிச்சு புடிச்சு மேல வந்தேன் சின்ன கேப்புல என்ற பாடல் பேசியுள்ளார்.
எனக்கு சோறு அவந்தாயா போடுறான் – Erode Mahesh Bold Speech | Kanmani Movie Audio Launch
அந்தப் பாடல்தான் தற்போது வரை என்னுடைய வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டாக இருந்து வருகிறது என இசைவாணி தெரிவித்துள்ளார்.