புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல் போய் விட்டதாக தகவல் பரவிய நிலையில் அவரின் மகளுடைய முகநூல் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நாட்டுப்புற கலைஞர்களாக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மூத்த மகள் பல்லவி அகர்வால் காணாமல் போய் விட்டதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பல்லவியை காணவில்லை, அவர் மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என புஷ்பவனம் குடும்பத்தின் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் பல்லவி அகர்வால் முகநூல் பக்கத்தில் நான் காணாமல் போனதாக தகவல்களை பரப்பி வருகின்றனர். அதையெல்லாம் நம்ப வேண்டாம், நான் நலமுடன் தான் உள்ளேன் நண்பர்களே என கூறி பதிவிட்டுள்ளார்.
அப்படியென்றால் பல்லவி அகர்வால் காணாமல் போகவில்லையா? பின்பு போலீஸில் புகார் ஏன்? உண்மை என்ன? புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினரின் பதில் என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.