கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் டாப் ஹீரோவை தாக்கி பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கெளதம் மேனன். இறுதியாக இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கெளதம் மேனன் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் ஹீரோக்களுக்கு படம் பன்னுவது என்றால் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு வசனம் எழுதும் நிலை உள்ளது என பேசினார்.
இதனால் கெளதம் மேனன் யாரை தாக்கி பேசுகிறார்? விஜயையா? ரஜினியையா? என்ற கேள்வியும் விவாதமும் சமூக வளையதளங்களில் உருவாகியுள்ளது.
காரணம் கெளதம் மேனன் சமீபத்தில் விஜயையும் ரஜினியையும் சந்தித்து கதை கூறியதாக வெளியான தகவல் தான், இருவருமே அரசியல் ஆசையில் இருப்பதால் தான் இந்த விவாதமே எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.