வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் இருட்டு. இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர் சுந்தர் சி. நாயகனாக சில படங்களில் நடித்த இவர் சமீப காலமாக படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இவர் இருட்டு படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
படத்தின் கதைக்களம் :
ஒரு ஊரில் ஒரு நாள் திடீரென பகல் பன்னிரண்டு மணிக்கு ஊரே இருட்டாகி விடுகிறது. அதன் பின்னர் அந்த இருட்டு அகல்வதற்குள் 6 கொலை நடக்கிறது.
இதனை விசாரிக்க வரும் போலீசும் தற்கொலை செய்து கொள்ள தமிழ் சினிமாவின் வழக்கப்படி சுந்தர். சி குடும்பத்துடன் அந்த ஊருக்கு என்ட்ரி கொடுக்கிறார்.
அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் சில அமானுஷங்கள் நடக்க இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.
படத்தை பற்றிய அலசல் :
நடிப்பு :
சுந்தர் சி இந்த படத்தில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலத்தையும் கொடுத்துள்ளார்.
மற்ற நடிகர், நடிகைகளும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து கொடுத்துள்ளனர்.
தொழில்நுட்பம் :
இசை :
க்ரிஷ் ஜி-யின் இசை படத்திற்கு கூடுதல் பலம்
ஒளிப்பதிவு :
இ. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளது.
எடிட்டிங் :
ஆர் சுதர்ஷனின் எடிட்டிங் சூப்பர்.
இயக்கம் :
தமிழ் சினிமா கண்டிராத ஒரு விசயத்தை கையில் எடுத்து படமாக்கியுள்ளார் வி.இசட் துரை. அதையும் சிறப்புற செய்துள்ளார். ஹாலிவுட் படங்களில் சாயல்கள் சில தெரிந்தாலும் படம் பார்ப்போரை ரசிக்க வைக்கும் அளவில் கொடுத்துள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் கதைக்களம்
2. சுந்தர்.சி-யின் நடிப்பு
தம்ப்ஸ் டவுன் :
1. சில காட்சிகளில் ஹாலிவுட் படங்களின் சாயல் தெரிகிறது.
2. தேவையில்லாத இடங்களில் ரொமான்ஸ் காட்சிகள்