பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு.
படத்தின் கதைக்களம் :
இரும்பு கடை ஒன்றில் லாரி டிரைவராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவரும் கயல் ஆனந்தியும் காதலிக்கின்றனர். இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இரண்டாம் உலக போரில் தூக்கி வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று கடலில் மிதந்து வந்த கரை ஒதுங்க அந்த குண்டு தினேஷிடம் சிக்குகிறது. அதன் பின்னர் குண்டுவை கைப்பற்ற அரசாங்கம் ஒரு புறம், சமூகநல மாணவர்கள் ஒரு புறம் என அலைகின்றனர்.
இறுதியில் என்ன ஆனது ?குண்டு யார் கைக்கு சென்றது? ஆனந்தியும் தினேஷும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல் :
நடிப்பு :
அட்டகத்தி தினேஷின் நடிப்பு வழக்கம் போல அசத்தல். நாலு படம் கொடுத்தாலும் நறுக்குன்னு கொடுக்கணும் என்கிற நோக்கத்தில் தான் நடிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
கயல் ஆனந்தியும் அவருடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். கிளைமேக்சில் காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் எல்லாம் பின்னி எடுத்துள்ளார்.
இவர்கள் மட்டுமில்லாமல் படத்தில் நடித்துள்ள அனைவருமே அவர்களின் வேலையை முழுமையாக செய்து கொடுத்துள்ளனர்.
தொழில்நுட்பம் :
இசை :
டென்மாவின் பின்னணி இசை பிரமாதம். பாடல் சுமார் ரகம்.
ஒளிப்பதிவு :
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு தெளிவு
தம்ப்ஸ் அப் :
1. தினேஷ் நடிப்பு
2. கதைக்களம்
3. இசை
தம்ப்ஸ் டவுன் :
1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. இனியாவது ஜாதியை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு படம்,எடுக்கலாம்.
மொத்தத்தில் குண்டு ஒரு வித்தியாசமான படம்.