இந்தியாவில் தயாராகி வரும் கொரானா தடுப்பு மருந்து குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது
India‘s Covishield Vaccine Update : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவின் தற்போதைய அதி தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்துமே திணறி வருகின்றன. இந்தியாவில் மட்டும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என 2 தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றனர்.
கோவேக்சின் என்ற தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகின்றது. கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தை புனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த கோவிஷீல்டு தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட மனித சோதனையை தொடங்கி இருப்பதாகவும் இந்தியாவில் மொத்தம் 17 மருத்துவமனைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.