Indian Team : டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) பங்கேற்கும் ஆசிய பெண்கள் கால்பந்து அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கின்றன.
இதன் இரண்டாவது கட்ட தகுதிச்சுற்றில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இந்தோனேஷியா, மியான்மர், நேபாள அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
நேற்று நடந்த போட்டியில் ‘நம்பர்-63’ இடத்திலுள்ள இந்தியா, 86வது இடத்திலுள்ள இந்தோனேஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா – ஐசிசி நடவடிக்கை!
போட்டியின் 24வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சஞ்சு அடித்த பந்து கோல் போஸ்டுக்கு வெளியே சென்றது.
27 வது நிமிடம் இந்தோனேஷியாவின் மூன்று வீராங்கனைகளை ஏமாற்றி, இந்திய அணிக்கு முதல் கோல் அடித்தார் கிரேஸ் தங்மாய். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர்.
போட்டியின் 67 வது நிமிடத்தில் மீண்டும் அசத்திய கிரேஸ், இந்திய அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய பெண்கள் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தோனேஷியாவை இரண்டு நட்பு போட்டிகளில் வென்ற இந்தியா, தொடர்ந்து இந்த அணிக்கு எதிராக மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நேபாளத்தை சந்திக்கிறது.