எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Indian Singer SP Balasubramaniam Death : இந்திய திரையுலகின் முன்னணி பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஒட்டுமொத்த இந்திய மொழியிலும் பல் ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த இவரது உடல் நிலையில் கடந்த சில வாரங்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென மீண்டும் கவலைக்கிடம் ஆனார்.
இதையடுத்து திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் வெகு விரைவில் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.
ஆனால் தொடர்ந்து அவரது உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி அவரது உடலிலிருந்து உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகனான எஸ்பிபி சரண் அவர்களும் உறுதிபடுத்தியுள்ளார்.
எஸ் பி பி யின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பலரும் அவருடைய மரணத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.