India vs South Africa T20 :
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரம்சாலாவில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இதனை தொடர்ந்து இந்திய அணி மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் தர்மசாலாவிற்கு சென்றனர். அங்கு பாரம்பரிய முறை படி அவர்களை வரவேற்றனர்.
நேற்று மாலை 7 மணிக்கு போட்டி தொடங்கி இருக்க வேண்டும் ஆனால் தொடங்கப்பட்டவில்லை. போட்டிகான டாஸ் சரியாக 6.30 மணிக்கு சுண்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நீ கலக்கு தல.. பெரிய இடைவெளிக்கு பிறகு அஜித் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டி.!
ஆனால், தரம்சாலாவில் மழை பெய்து வந்ததால் டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சர்மா விளையாடும் போட்டி இது. எனவே அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.