Ind Vs Aus Match :
இந்தியா, ஆஸ்., அணிகளுக்கு இடையே நாளை பிரிஸ்பேனில் மூன்று டி-20, நான்கு டெஸ்ட், மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதலில் டி-20 போட்டி தொடங்க உள்ளது. இந்திய அணியை பொறுத்த வரை நடந்து முடிந்த மே.தீ., அணி உடனான தொடரை கைப்பற்றியது.
2015-2016 ல் நடந்த தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் இந்தியா ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வென்றது குறிபிடதக்கது.
இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறுவது :
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி, வேகத்துக்கு சாதகமான பெர்த் அல்லது பிரிஸ்பேன் ஆடுகளத்தில் விளையாடி உள்ளது.
இந்த இரண்டு ஆடுகளங்களும் இந்திய வீரர்களுக்கு சவாலானவை. ஆஸ்,. அணியின் பவுலர்களும் சற்று உயரமானவர்கள், தங்களுக்கு சாதகமாக சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பர்.
இந்திய பேட்ஸ் மேன்கள் உயரமானவர்கள் அல்ல இதனால் பேட்டிங் என்பது எங்களுக்கு அவ்வளவு எளிதல்ல. ஆனால் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இம்முறை மாற்றம் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம் என ரோகித் சர்மா கூறினார்.