India President Speech for People : வரும் சனிக்கிழமை அன்று ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் குடியரசுத் தலைவர் உரை இடம்பெறும் என்பது வழக்கம்.
அதேபோன்று இந்த வருடமும் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: “ தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி” என அனைத்து தேசிய ஊடக நிறுவனங்கள் மூலமும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாக உள்ளது.
முதலில் இந்த உரையானது ஹிந்தியிலும் அதன்பிறகு ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும்.
தொடர்ந்து, தூர்தர்ஷன் பிராந்திய சேனல்களில் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் உரை இடம்பெறும்.
அகில இந்திய வானொலியில் இரவு 9.30 மணி அளவில் பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவர் உரை ஒளிபரப்பாகும் என்று அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.