ravi

Indian Cricket Team : வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய அணி ஆஸ்., உடனான போட்டிகள் புதன்கிழமை தொடங்க இருக்கின்றது. இதனிடையில் பத்திரைக்கை நிபுணர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு ரவிசாஸ்திரியிடம் கண்டனம் தெரிவித்துளார்.

நிபுணர் கேட்ட கேள்வி என்ன என்றால் ‘தெனாப்ரிக்கா’ மற்றும் இங்கிலாந்து தொடர்களை தோல்வி கண்ட நிலையில் இப்பொழுது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வெற்றி பெறுவது எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்தது என்று கேட்டார்.

சற்றே கோபம் அடைந்த ரவிசாஸ்திரி “ வெளி நாட்டு தொடர்களில் இந்தியா மட்டுமே தோல்வி அடைவது போல் கேள்வி கேட்கிறீர்கள்.

சமீப காலமாக நடந்த வெளி நாட்டு போட்டிகளில் பெருபாலன அணிகள் தோல்வியே சந்தித்து உள்ளது. பின் இந்தியாவை மட்டும் ஏன் இப்படி மைய்யப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள்?” என்று கூறி உள்ளார்.

மற்றும் இந்திய அணியினை பற்றி குறிப்பிடும் போது, ஹர்திக் பாண்ட்யா இல்லாதது இந்திய அணிக்கு சற்றே பிணைடைவுதான்.

அவர் அணியின் இருந்து இருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்து இருக்கலாம். பண்ட்யா பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டையும் சமாளிப்பார்.

இப்பொழுது இரண்டு விதமாக யோசிக்க வேண்டி உள்ளது. மேலும் வேக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் ஹர்திக் பாண்ட்யா இல்லாத குறை பெரிதாக தெரிய வராது. என்றும் கூறி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.